சென்னை அயனாவரம் பகுதியில் 40 ஆண்டுகளாக இயங்கி வரும் தேவாலயத்தை, மெட்ரோ வாட்டர் துறையினர் இன்று அகற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நள்ளிரவில் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி, தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பேராயர் சற்குணம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஆய்வு அங்கு ஆய்வு செய்தனர்.