தமிழ்நாடு

நடந்து சென்ற பெண்ணிடம் 25 சவரன் சங்கிலி பறிப்பு

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 25 சவரன் சங்கிலியை பறித்து சென்றனர்.

தந்தி டிவி

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தி நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 25 சவரன் டாலர் சங்கிலியை பறித்து சென்றனர். தடுக்க முயன்ற சாந்திக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு