தமிழ்நாடு

நடந்து சென்ற பெண்ணிடம் 25 சவரன் சங்கிலி பறிப்பு

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 25 சவரன் சங்கிலியை பறித்து சென்றனர்.

தந்தி டிவி

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தி நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 25 சவரன் டாலர் சங்கிலியை பறித்து சென்றனர். தடுக்க முயன்ற சாந்திக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பரபரப்பான பகுதியில் நடைபெற்ற இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்