சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ராணுவ வீரர் தவறவிட்ட 7.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பொருட்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டு ஒப்படைத்தனர். தேர்தல் சோதனையின் போது, கேட்பாரற்றுக் கிடந்த பையில் 7 சவரன் தங்கம், வெள்ளி மற்றும் 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பதைக் கண்டறிந்த போலீசார், அதிலிருந்த ஆவணங்கள் மூலம் ராணுவ வீரர் ஐயப்பனைத் தொடர்பு கொண்டனர். உரிய ஆவணங்களைச் சரிபார்த்த பின் அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன