தமிழ்நாடு

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை தாக்குதல்களில் 350-க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில், தமிழக காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபரேஷன் ஸ்டோமிங் என்று அழைக்கப்படும் இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் போது, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்