தமிழ்நாடு

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை தாக்குதல்களில் 350-க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில், தமிழக காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபரேஷன் ஸ்டோமிங் என்று அழைக்கப்படும் இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் போது, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி