தமிழ்நாடு

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது, தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் தற்கொலை தாக்குதல்களில் 350-க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில், தமிழக காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபரேஷன் ஸ்டோமிங் என்று அழைக்கப்படும் இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனையின் போது, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு