தமிழ்நாடு

ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது : 3 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னையில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரபேட்டை ஸ்டான்லி நகரில் குடியிருப்பு அருகே நின்ற ஆட்டோவை சோதனையிட்ட போலீசார், அதில் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கொருக்குபேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபியை கைதுசெய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்