தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை ஆலந்தூரில், தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி, நடந்த இந்தப் பேரணியில், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணியானது, ஆலந்தூர் எம்.கே.என். சாலை, ஆலந்தூர் மார்க்கெட், ரயில்வே நிலைய சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆசர்கானா மைதானத்தை அடைந்தது. அங்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை