தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டம் : சென்னை செல்ல பேருந்து கிடைக்காத‌தால் ஆத்திரம்

சென்னைக்கு செல்ல அரசு பேருந்து கிடைக்காமல் பல மணி நேரம் காத்துக்கிடந்த பயணிகள், நள்ளிரவில் நடத்திய மறியல் போராட்டம், விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

தந்தி டிவி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவு வரை பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் புதிய பேருந்து நிலையம் வெளியே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதே போல வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை மறித்தபோது, ஓட்டுநர்கள், பயணிகள் இடையே கடும் வாக்குவாத‌ம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பலனாக விழுப்புரத்தில் இருந்து மேலும் சில பேருந்துகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டு பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?