தமிழ்நாடு

சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கம் - பேருந்துகளில் தனி மனித இடைவெளி இல்லை என புகார்

சென்னையில் 200 பேருந்து இயக்கப்பட்டு வந்த சூழலில் மேலும் 30 பேருந்து கூடுதலாக இயக்கப்படுகின்றன.

தந்தி டிவி

சென்னையில் 200 பேருந்து இயக்கப்பட்டு வந்த சூழலில், மேலும் 30 பேருந்து கூடுதலாக இயக்கப்படுகின்றன. அவசர கால, அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் 50 சதவீதம் அரசு ஊழியர்கள் என அனைவரும் பணிக்கு சென்று வர ஏதுவாக 200 பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது ஊழியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மேலும் 30 பேருந்துகளை கூடுதலாக இயக்குகிறது. குறிப்பாக, தலைமைச் செயலகம் உட்பட முக்கிய அரசு துறைகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, பல பேருந்துகளில் அதிகளவில் ஊழியர்கள் பயணிப்பதால், தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்