சென்னையில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்... சூளைமேடு கஸ்தூரிபாய் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை சிறுவர்கள் திருடிய போது ரோந்து போலீசார் கையும் களவுமான பிடித்தனர். விசாரணையில், 7 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் என்பதும், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பைக்குகளை திருடி, பெட்ரோல் இருக்கும் வரை ஓட்டி விட்டு பின்னர் மறைத்து வைப்பது வழக்கமாக இருந்தது தெரியவந்தது. சிறார்களின் தகவலின் பேரில் நான்கு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்