தமிழ்நாடு

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆறுமுகம், எழும்பூர் பழைய கமிஷனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. அதில் ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக் மீது இடித்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆறுமுகம் தாம் வைத்திருந்த தலைக்கவசத்தை அணியாததால், உயிரிழந்தார் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ