தமிழ்நாடு

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆறுமுகம், எழும்பூர் பழைய கமிஷனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. அதில் ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக் மீது இடித்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆறுமுகம் தாம் வைத்திருந்த தலைக்கவசத்தை அணியாததால், உயிரிழந்தார் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்