தமிழ்நாடு

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் பலி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூரில், இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், தனியார் வங்கி ஊழியர் ஆறுமுகம் உயிரிழந்தார்.

சென்னை மாதவரத்தை சேர்ந்த ஆறுமுகம், எழும்பூர் பழைய கமிஷனர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. அதில் ஆறுமுகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பைக் மீது இடித்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆறுமுகம் தாம் வைத்திருந்த தலைக்கவசத்தை அணியாததால், உயிரிழந்தார் என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்