சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், விழாவில் பாதிரியார்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எனினும், கொடியேற்ற விழாவை நேரலையில் ஒளிபரப்ப ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.