தமிழ்நாடு

பகலில் பியூட்டி பார்லர்.. இரவில் பாலியல் தொழில் - சென்னை சிட்டியில் ஷாக்

தந்தி டிவி

சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் தினேஷ் என்பவர் பியூட்டில் பார்லர் நடத்தி வந்துள்ளார். இங்கு, மறைமுகமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பார்லருக்கு விரைந்து சோதனை நடத்திய போலீசார், அங்கு பாலியல் தொழில் நடைபெற்றதை உறுதி செய்த நிலையில், தினேஷை கைது செய்தனர். தொடர்ந்து, பார்லரில் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி 6 பெண்களை மீட்ட போலீசார், அனைவரையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர். வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் பெண்களை குறி வைத்து, பார்லரில் வேலை வாய்ப்புத் தருவதாக கூறி, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்