தமிழ்நாடு

கடற்கரையில் கஞ்சா அடித்த கல்லூரி மாணவர்கள் - கஞ்சா, ஹெராயின் பொட்டலங்களும் பறிமுதல்

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மாணவர்கள் கஞ்சா பிடித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். மாணவர்களின் காரை சோதனையிட்டதில் 30 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 90 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ