தமிழ்நாடு

கடற்கரையில் கஞ்சா அடித்த கல்லூரி மாணவர்கள் - கஞ்சா, ஹெராயின் பொட்டலங்களும் பறிமுதல்

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மாணவர்கள் கஞ்சா பிடித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். மாணவர்களின் காரை சோதனையிட்டதில் 30 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 90 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை