தமிழ்நாடு

கடற்கரையில் கஞ்சா அடித்த கல்லூரி மாணவர்கள் - கஞ்சா, ஹெராயின் பொட்டலங்களும் பறிமுதல்

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மாணவர்கள் கஞ்சா பிடித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். மாணவர்களின் காரை சோதனையிட்டதில் 30 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 90 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி