தமிழ்நாடு

கடற்கரையில் கஞ்சா அடித்த கல்லூரி மாணவர்கள் - கஞ்சா, ஹெராயின் பொட்டலங்களும் பறிமுதல்

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் கடற்கரையில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரைப் பகுதியில் நான்கு இளைஞர்கள் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மாணவர்கள் கஞ்சா பிடித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். மாணவர்களின் காரை சோதனையிட்டதில் 30 கிராம் எடையுள்ள ஹெராயின் மற்றும் 90 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு