தமிழ்நாடு

பொறியியல் துணை கலந்தாய்வில் குளறுபடி : பலமணி நேரம் காத்திருந்த மாணவர்கள், பெற்றோர்

சென்னையில் நடைபெறும் பொறியியல் துணை கலந்தாய்வில் உரிய வசதிகள் இல்லை என கூறி அதிகாரிகளுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் பொறியியல் துணை கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காலை முதலே காத்திருந்தனர்.

ஆனால் இரவாகியும் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நள்ளிரவிலும் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சர்வர் கோளாறு காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சேர்க்கைப் பணிகள் மதியம் முதலே தடைபட்டுள்ளதாகவும், கோளாறு உடனே சரிசெய்யப்பட்டு கலந்தாய்வைத் தொடங்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே