தமிழ்நாடு

வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார்

சென்னையில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டு வேலைக்கார பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை பழைய பல்லாவரம் பகுதியில் வசித்து வரும் யோக சேரன் தனியார் வங்கியில் மேலாளராக இருந்து வருகிறார். இவர் வீட்டிற்குள் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று நுழைந்துள்ளது. வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டி 200 சவரன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் வேலை பார்த்து வந்த மதுரையை சேர்ந்த மகாராணி என்ற பெண்ணே இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. கொள்ளையடிக்க திட்டமிட்ட மகாராணி, வீட்டில் வளர்க்கப்பட்ட 2 நாய்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். அதன்பின்னர் மதுரையில் இருந்து 4 இளைஞர்களை வரவழைத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த நகைகளுடன் தலைமறைவான மகாராணி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்