தமிழ்நாடு

இடிந்து விழுந்தமதுபான விடுதி மேற்கூரை - சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன முக்கிய தகவல்!

தந்தி டிவி

இடிந்து விழுந்தமதுபான விடுதி மேற்கூரை - சென்னை மாநகராட்சி ஆணையர் சொன்ன முக்கிய தகவல்!

விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்ற வருவதாகவும் சம்பந்தப்பட்ட மதுபான விடுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார் , மேலும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்ற வருவதாகவும் தற்போதைய நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை என்பது கான்கிரீட் கலவியால் போடப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும் , அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் தான் விபத்திற்கான காரணமா என்பது குறித்தும் உடனடியாக கூறமுடியாது என தெரிவித்த அவர் சம்பந்தப்பட்ட மதுபான விடுதி உரிய அங்கீகாரம் பெற்று இயங்கி வருவதாகவும் மதுபான விடுதி உரிமையாளரை அனைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார் .

மேலும் உயிரிழந்த மூவரில் ஒருவர் திருச்சி சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் மணிப்பூவை சேர்ந்த மற்ற இருவர் குறித்து தகவல் சேகரித்து அவர்களது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தப்படும் என குறிப்பிட்டார் .

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு