இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விமான போக்குவரத்து இயக்குநரகம், கட்டண வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விமான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு ஆன்லைனில் கேன்சல் செய்தால், பணம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.