தமிழ்நாடு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் : அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிய குருவிகள்

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை கடத்தி வந்த குருவிகள், அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை கடத்தி வந்த குருவிகள், அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், குருவிகள் தப்பியோடியது குறித்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரி பிரித்விராஜ் விமான நிலைய போலீசில் புகார் செய்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை