தமிழ்நாடு

சென்னையில் ரூ.1 கோடி தங்கம் - 14 லட்சம் கரன்சிகள் பறிமுதல்

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற, ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும், துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியுள்ளது.

தந்தி டிவி

டெல்லிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பவுசல் கரீம் மற்றும் சையத் அஜீஸ் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், இருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 210 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த வந்த முகமது ஹக்கீம் மற்றும் பீர் மைதீன் ஆகியோரிடம் இருந்து 14 லட்சம் மதிப்பிலான் யூரோ கரன்சிகளையும் கைப்பற்றினர். பின்னர், 4 பேரை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு