தமிழ்நாடு

Chennai | சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி... பரபரப்பு

சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி... பரபரப்பு

thanthitv

சென்னை தி.நகரில் உள்ள ஹோட்டலில் நடிகைக்கு நடந்த அதிர்ச்சி... பரபரப்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில், மலையாள நடிகையிடம் அத்துமீற முயன்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை தியாகராய நகர் தாமஸ் சாலையில் உள்ள ஹோட்டலில், ஆலந்தூரை சேர்ந்த 20 வயது இளைஞர் சையது அப்ரிடி என்பவர், பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த இளம் மலையாள நடிகை, படப்பிடிப்பு சம்பந்தமாக இந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனிடையே, அந்த நடிகையிடம் சையது அப்ரிடி தவறாக நடக்க முயன்றதாக அளித்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சையது அப்ரிடியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்