தமிழ்நாடு

100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்

மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சிறுமி ஹரிணியை கடத்திய நபர் திருப்போரூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். குழந்தை இல்லாமல் இருந்து வந்த சங்கீதாவுக்கு ஹரிணியை பணத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் இதுகுறித்த தகவல்கள் வெளியான போது அதிரடியாக களம் இறங்கிய போலீசார், திருப்போரூரில் சங்கீதாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

2 வயது சிறுமியை சந்திக்க லதா ரஜினி விருப்பம் - இன்று காலை சந்திப்பு என தகவல்

இதற்கிடையே, மீட்கப்பட்ட சிறுமி ஹரிணியை சந்திக்க லதா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுமி ஹரிணி மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியரை லதா ரஜினிகாந்த நேரில் அழைத்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில், இன்று காலை இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி