தமிழ்நாடு

100 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஹரிணி - குழந்தையை மீட்க பெற்றோர் நடத்திய பாசப் போராட்டம்

மதுராந்தகம் அருகே வசித்து வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த 2 வயது சிறுமி ஹரிணி காணாமல் போய் 100 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சிறுமி ஹரிணியை கடத்திய நபர் திருப்போரூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். குழந்தை இல்லாமல் இருந்து வந்த சங்கீதாவுக்கு ஹரிணியை பணத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் இதுகுறித்த தகவல்கள் வெளியான போது அதிரடியாக களம் இறங்கிய போலீசார், திருப்போரூரில் சங்கீதாவிடம் இருந்த குழந்தையை மீட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

2 வயது சிறுமியை சந்திக்க லதா ரஜினி விருப்பம் - இன்று காலை சந்திப்பு என தகவல்

இதற்கிடையே, மீட்கப்பட்ட சிறுமி ஹரிணியை சந்திக்க லதா ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். சிறுமி ஹரிணி மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியரை லதா ரஜினிகாந்த நேரில் அழைத்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்தில், இன்று காலை இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை