தமிழ்நாடு

செங்கம் : டாஸ்மாக் கடையை மூடி பொது மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுக்கடைகுறித்து, பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், திடீரென ஒன்று சேர்ந்த அப்பகுதி மக்கள், மதுபான கடையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி, விரைவில் கடை அகற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் முடிவுக்கு வந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ