தமிழ்நாடு

செங்கம் : டாஸ்மாக் கடையை மூடி பொது மக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி, பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மதுக்கடைகுறித்து, பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், திடீரென ஒன்று சேர்ந்த அப்பகுதி மக்கள், மதுபான கடையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கம் காவல் ஆய்வாளர் ஜெயந்தி, விரைவில் கடை அகற்றப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் முடிவுக்கு வந்தது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்