ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்ததால் பரபரப்பு செங்கல்பட்டில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி ரயிலும், நடைமேடையும் இடையில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விரைந்து செயல்பட்டு, பயணியை வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய காவலருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.