வடகிழக்கு பருவமழை காலமான தற்போது, நல்ல மழை பெய்து வருகிறது. எனினும் அவ்வப்போது சிறிது இடைவெளி வெட்டு மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீராக உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மிதான மழை பெய்து. அதிகாலை முதல் வானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 26 டிகிரி முதல் 30 டிகிரியாக வெப்ப நிலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.