தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது

தந்தி டிவி

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் நடத்திய சோதனையில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை, தேனாம்பேட்டையை சேர்ந்த சரவணன் என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்று தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் கைது செய்யப்பட்டார். தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அதிகளவில் மது அருந்திவிட்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்