தமிழ்நாடு

தமிழகத்தில் 25 இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் - மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
செய்துங்க நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங் குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.அதில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்