தமிழ்நாடு

நீட் தேர்வு மைய பெயர் குழப்பம் - தேர்வு எழுத முடியாமல்போன சோக சம்பவம்

நீட் தேர்வு மைய பெயர் குழப்பத்தால் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத முடியாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

நீட் தேர்வு மைய பெயர் குழப்பத்தால் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத முடியாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தாமரை இன்டர்நேஷனல் பள்ளி என்ற பெயரில் கும்பகோணத்திலும் தஞ்சாவூரிலும் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கல்வி நிறுவனத்திலும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. ஒரே பெயரில் இரண்டு தேர்வு மையங்கள் இருப்பதனால் தஞ்சை தேர்வு மையத்திற்கு செல்லவேண்டிய மாணவிகள் கும்பகோணத்திற்கும் கும்பகோணம் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய மாணவ மாணவியர்கள் தஞ்சாவூருக்கும் சென்றனர். இதையடுத்து உரிய தேர்வு மையத்திற்கு மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பபட்டனர். இதனால் சரியான நேரத்திற்கு வரமுடியாத மாணவிகள் தேர்வு எழுத பதற்றத்துடன் வந்த போது தேர்வு தொடங்கி விட்டதாக அறிவித்ததால் சில மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போல் பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை