தமிழ்நாடு

நீட் தேர்வு மைய பெயர் குழப்பம் - தேர்வு எழுத முடியாமல்போன சோக சம்பவம்

நீட் தேர்வு மைய பெயர் குழப்பத்தால் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத முடியாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

நீட் தேர்வு மைய பெயர் குழப்பத்தால் காலதாமதமாக தேர்வு மையத்திற்கு வந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வு எழுத முடியாமல்போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தாமரை இன்டர்நேஷனல் பள்ளி என்ற பெயரில் கும்பகோணத்திலும் தஞ்சாவூரிலும் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இரு கல்வி நிறுவனத்திலும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. ஒரே பெயரில் இரண்டு தேர்வு மையங்கள் இருப்பதனால் தஞ்சை தேர்வு மையத்திற்கு செல்லவேண்டிய மாணவிகள் கும்பகோணத்திற்கும் கும்பகோணம் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய மாணவ மாணவியர்கள் தஞ்சாவூருக்கும் சென்றனர். இதையடுத்து உரிய தேர்வு மையத்திற்கு மாணவ-மாணவிகள் திருப்பி அனுப்பபட்டனர். இதனால் சரியான நேரத்திற்கு வரமுடியாத மாணவிகள் தேர்வு எழுத பதற்றத்துடன் வந்த போது தேர்வு தொடங்கி விட்டதாக அறிவித்ததால் சில மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போல் பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்