தமிழ்நாடு

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்

செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்

தந்தி டிவி

சென்னை , மதுரவாயல் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெயபாண்டியன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வளசரவாக்கம், மெஜஸ்டிக் காலனியில் நண்பர் வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முகவரி கேட்பது போல் ஜெயபாண்டியனின் செல்போனை பறித்துச் சென்றனர்.

மொபைலை மீட்க, இருசக்கர வாகனத்தின் பின்பக்க கம்பியை பிடித்து போராடிய அவர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதில், சிவா என்பவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன், முதியவர் ஜெயபாண்டியனின் வீட்டிற்கே நேரில் சென்று ஒப்படைத்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி