தமிழ்நாடு

செல்போன் பறிப்பு சம்பவம் : முதியவரின் வீட்டிற்கு சென்று செல்போனை வழங்கிய துணை ஆணையர்

செல்போன் பறிப்பு சம்பவத்தில், முதியவரின் வீட்டிற்கே சென்று, அவரது செல்போனை, காவல்துறை துணை ஆணையர் வழங்கினார்

தந்தி டிவி

சென்னை , மதுரவாயல் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஜெயபாண்டியன். கடந்த ஞாயிற்றுக்கிழமை வளசரவாக்கம், மெஜஸ்டிக் காலனியில் நண்பர் வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முகவரி கேட்பது போல் ஜெயபாண்டியனின் செல்போனை பறித்துச் சென்றனர்.

மொபைலை மீட்க, இருசக்கர வாகனத்தின் பின்பக்க கம்பியை பிடித்து போராடிய அவர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். இதில், சிவா என்பவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன், முதியவர் ஜெயபாண்டியனின் வீட்டிற்கே நேரில் சென்று ஒப்படைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்