நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெறும் தமிழ்நாடு தின கொண்டாட்டங்களுக்காக 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது, தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அன்றைய தினம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் நாட்டிற்காகவும் பாடுபட்ட தமிழர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளது.