தமிழ்நாடு

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணை அடித்து சீண்டிய மூவர் - கொடூரத்தின் உச்சிக்கு சென்ற காம கொடூரர்கள்.. கொதித்த பொது மக்கள்.. கோவையில் பயங்கரம்

தந்தி டிவி

கோவை மாவட்டம், சூலூர் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்...

எம்.ஜி.ஆர் நகர் அருகே சட்ட விரோதமாக கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அங்கு கள் குடிக்க வரும் நபர்களால் பிரச்சனை ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கள் குடிக்க வந்த செல்லதுரை என்ற நபர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், செல்லதுரையை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, செல்லதுரை தன்னுடன் மேலும் இருவர் வந்ததாகவும் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றதாகவும் கூறிய நிலையில், தப்பியோடிய இருவரை கைது செய்ய வேண்டுமெனவும், அப்பகுதியில் உள்ள கள்ளுக்கடையை அகற்ற வேண்டுமெனவும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு