Cauvery | Trichy | Mukkombu | டெல்டாவை தொட்டுவிட்ட காவிரி.. கண்ணை பறிக்கும் முக்கொம்பு.. Drone காட்சி
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர், திருச்சி முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கொம்பு மேலணைக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் இன்று இரவு அல்லது நாளை காலை கல்லணையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்திற்காக அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.