தமிழ்நாடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் : வைகோ, திருமாவளவன் உள்பட 3 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய வழக்கில், வைகோ, திருமாவளவன் உள்பட 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016 ஆம் ஆண்டு, எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அரசு தரப்பு சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 4 ம் தேதிக்கு நீதிபதி ரமேஷ் தள்ளிவைத்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்