தமிழ்நாடு

கல்லூரியில் சாதி பாகுபாடு - கல்லூரி முதல்வர் மீது புகார்

தந்தி டிவி

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த கல்லூரியில் பேராசிரியர் கிருஷ்ணன் சாதிபாகுபாடு பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர், சில பேராசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக கூறினர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பேராசிரியர் கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ