தமிழ்நாடு

"குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கு" நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை

மதுரையில் குழந்தை கடத்தி விற்பனை செய்த வழக்கை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

தந்தி டிவி

"குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கு" நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை

மதுரையில் குழந்தை கடத்தி விற்பனை செய்த வழக்கை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.மதுரை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் அனுப்பியுள்ள மனுவில், மதுரையில் இயங்கி வந்த இருதயம் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு, இரண்டு குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த அறக்கட்டளையின் உரிமையாளர் சிவக்குமார், சில அதிகாரிகள் துணையுடன், போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் சிவகுமார் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு