சென்னை புழல் மகளிர் தனிச் சிறையில், அறை மாற்றியதை கண்டித்து, டியூப் லைட்டை உடைத்ததோடு, சிறை காவலர்களுக்கு மிரட்டலும் விடுத்த திருநங்கைகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறையில் சோதனை நடத்த ஒத்துழைக்க மறுத்த திருநங்கைகள் அபி மற்றும் சுஜியை, வேறு அறைக்கு மாற்றியதால் மிரட்டல் விடுத்த நிலையில், அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.