தமிழ்நாடு

நடிகர்கள் சூரி, விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு - ஊரடங்கு உத்தரவை மீறியதால் நடவடிக்கை

ஊரடங்கு விதிகளை மீறி கொடைக்கானல் வனப்பகுதிக்குள் சென்ற நடிகர்கள் சூரி மற்றும் விமல் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் உள்ளிட்டோர் மீன்பிடித்த படங்கள் வெளியானது. இதையடுத்து அவர்கள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்தது. இந்த நிலையில்

கோட்டாட்சியர் சிவகுமார் நடத்திய விசாரணையில் அவர்கள் இ-பாஸ் இல்லாமல் வந்ததும் ஏரியில் மீன்பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்டோர் மீது தொற்றுநோய் பரவும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான வனத்துறையை சேர்ந்த பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் மேலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்