தமிழ்நாடு

விபத்தில் 2 கால்களும் செயலிழந்த தச்சு தொழிலாளி..- கோரிக்கை வைத்த மாற்றுத் திறனாளி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள மாராடி என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த தச்சு தொழிலாளி ராஜன், சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது, அவரது இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். பின்னர், வருமானத்திற்காக, தேங்காய் சிரட்டைகளை சேகரித்து, அதனைக் கொண்டு கரண்டி, தேநீர் கோப்பைகள் உள்ளிட்டவற்றை செய்து விற்பனை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வருகிறார். திருமணமாகாத ராஜன், தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். தனக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான சலுகைகள் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்