தமிழ்நாடு

காவலர்கள் திட்டியதால் வேதனை - ரயில் முன் விழுந்து கார் ஓட்டுனர் தற்கொலை...

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராஜேஷ் என்ற அந்த ஓட்டுனர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை ஏற்றி சென்ற போது மற்றொருவரை அழைத்து செல்வதற்காக பாடி அருகே காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலர்கள் ராஜேஷை தரக்குறைவாக திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் அண்மையில் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து செல்போனில் ராஜேஷ் உருக்கமாக பேசிய வீடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு