தமிழ்நாடு

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் : காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பிய பயணிகள்

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தை சேர்ந்த கமலேஷ், தமது தாய் மற்றும் சகோதரருடன் சென்னைக்கு காரில் வந்துள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள மேம்பாலத்தில் வந்தபோது மின்கசிவு காரணமாக காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். பின்னர் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து காரணமாக பல்லாவரம் - கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்