தமிழ்நாடு

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் : காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பிய பயணிகள்

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலத்தை சேர்ந்த கமலேஷ், தமது தாய் மற்றும் சகோதரருடன் சென்னைக்கு காரில் வந்துள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள மேம்பாலத்தில் வந்தபோது மின்கசிவு காரணமாக காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து, உடனடியாக காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். பின்னர் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து காரணமாக பல்லாவரம் - கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை