தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா போதையில் குழந்தை கடத்தலா? - அலறிய சிறுவர்கள்... ரத்தம் சொட்ட தர்ம‌ அடி

தந்தி டிவி

சென்னை புளியந்தோப்பில், குழந்தையை கடத்த முயன்றதாக கஞ்சா போதை ஆசாமியை, பொது மக்கள் அடித்து துவைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கடுகளூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், கஞ்சா போதைக்கு அடிமையாகி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் அப்பகுதியில் உள்ள குழந்தைகளை தூக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிறுவர்கள் கூச்சலிட்ட‌தும், அப்பகுதி மக்கள், குழந்தையைக் கடத்த முயன்றதாக கூறி, அடித்து துவைத்துள்ளனர். உடல் முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இது தொடர்பாக புகார் பெற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு