சென்னையில் துணை நடிகைக்கு நாடகத்தில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த துணை நடிகையிடம் கேமராமேன் காசிநாதன் அத்துமீறியதாக தெரிகிறது. இது தொடர்பாக துணை நடிகை அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.