தமிழ்நாடு

மருத்துவமனையில் ஆபாச படம் பார்த்த ஊழியர் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் உடைமாற்றும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த‌து அம்பலமாகியுள்ளது.

தந்தி டிவி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பராமரிப்பு பணி செய்துவரும் ஊழியர், சிவப்பிரகாஷ். நேற்று முன்தினம் பணி நேரத்தில் தனது செல்போனில் ஆபாச படங்களை சிவ பிரகாஷ் பார்த்து கொண்டிருந்த‌தாக கூறப்படுகிறது. இதனை கண்ட மருத்துவமனை மேலாளர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிவப்பிரகாஸின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் சில பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சிவபிரசாஷிடம் கிடுப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மருத்துவமனையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து சிவபிரகாஷ் வீடியோ எடுத்தது தெரிய வந்தது. பராமரிப்பு பணி என்ற பெயரில் பெண்கள் உடை மாற்றும் அறைக்குள் நுழையும் சிவப்பிரகாஷ், யாரும் இல்லாத நேரத்தில் செல்போனை மறைத்து வைத்து, பல பெண்களை இவ்வாறு வீடியோ எடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. வீடியோக்களை வேறு யாருக்காவது அனுப்பி இருக்கிறாரா என்ற கோணத்தில் சிவபிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்