கம்போடியாவில் விஷ்ணு சிலை ஒன்று இடித்து அகற்றப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அவமரியாதைக்குரிய செயல்கள் பலரது உணர்வுகளை புண்படுத்தக்கூடியவை என்றும் இவை நடக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், உயிர் இழப்புகள் மற்றும் சேதங்களை மேலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது..