தமிழ்நாடு

முதல் முறையாக CAA மூலம்... பாக்., ஆப்கன்-ல் இருந்து வந்த 14 பேருக்கு குடியுரிமை..!

தந்தி டிவி

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் பாரசீகர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களில், முதற்கட்டமாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது. அவர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, குடியுரிமைச் சான்றிதழை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை