தமிழ்நாடு

முதல் முறையாக CAA மூலம்... பாக்., ஆப்கன்-ல் இருந்து வந்த 14 பேருக்கு குடியுரிமை..!

தந்தி டிவி

மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் பாரசீகர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களில், முதற்கட்டமாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது. அவர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, குடியுரிமைச் சான்றிதழை வழங்கினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்