தமிழ்நாடு

பட்டய கணக்காளர் தேர்வு - மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு?

ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம் என பட்டய கணக்காளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

தந்தி டிவி

ஜூலை 31 ஆம் தேதி நடைபெற உள்ள பட்டய கணக்காளர் தேர்வுகளை விரும்பும் மாணவர்கள் மட்டும் எழுதலாம் என்றும், ஜூலையில் எழுத இயலாத மாணவர்கள் opt-out என்கின்ற தெரிவினை செய்து, நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கலாம் என பட்டய கணக்காளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டயக் கணக்கர் தேர்வில் பங்கேற்க ஜூலை மாதத்தோடு முடியும் கெடுவை, நவம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளதாகவும், இந்திய பட்டயக் கணக்காளர் சங்கம் தெரிவித்துள்ளது. மே மாதம் நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு ஜூன் மாதத்திற்கும், பின்னர் இரண்டாவது முறையாக ஜூலை மாதத்திற்கும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை