தமிழ்நாடு

"மாலை 6 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

தந்தி டிவி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வரும் நாளை மறுநாள் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைவதால் வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாங்குநேரியில் பண பட்டுவாடா புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC