பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்த பஸ் - லாரிகளில் ஏறி பள்ளி செனற மாணவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, அதிகளவில் பயணிகள் ஏறியதால் மாநகர பேருந்து சாலையோரம் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வேறு வழியின்றி மாணவர்கள் லாரிகளில் ஏறியும், இருசக்கர வாகனங்களில் லிப்ட் சென்றனர். குறிப்பிட்ட நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.