தமிழ்நாடு

பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் : நோய் தொற்று ஏற்படும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கொட்டப்படும் மருத்துவகழிவுகளால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தை சுற்றிலும் ரயில் நிலையம், பள்ளி கல்லூரிகள் என பல அம்சங்களும் அமைந்துள்ளன. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவ மாணவிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தில் ரத்த பரிசோதனை நிலையங்களில் அகற்றப்படும் கழிவுகள், ஊசிகள், மருந்து பாட்டில்கள், ஊசிகள் என மருத்துவ கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் மொய்க்கும் ஈக்கள், உணவு பண்டங்களில் நோயை பரப்புவதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும், பயணிகளும், ரத்தம் தொய்ந்த பஞ்சுகளையும் ஊசிகளையும் மிதிப்பதாலும் நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்