தமிழ்நாடு

பஸ் பாஸ் கேட்டு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

உடனடியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர்.

தந்தி டிவி

உடனடியாக பஸ் பாஸ் வழங்கவும், 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியற்றவை என்கிற அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி, நாகையில் பாரதிதாசன் உறுப்பு மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 500,க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர். தற்போது நடைபெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன், கிராமப்புறங்களில் இருந்து வரும் தங்களுக்கு இதுநாள் வரை பஸ் பாஸ் வழங்காததால் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் , உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்