Bus Accident | வயலில் தலைகுப்புற கவிழ்ந்த பஸ்.. பயணித்தோர் நிலை..? தஞ்சை அருகே பரபரப்பு
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே அரசு பேருந்து சாலையோர வயலில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி சென்ற பேருந்து, இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.